தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு குறித்து அறிக்கை வெளியாகி இருக்கிறது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்.3) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே போல கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவப்படும். மேலும் பிப். 4 முதல் பிப்.9 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
TN TET தேர்வில் முதல் முறையே தேர்ச்சி நிச்சயம் – வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! உடனே முந்துங்கள்!
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.