தனியார் பள்ளிகளுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் 10 மாதங்களாக பள்ளிகள் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள மின் கட்டணம் மற்றும் சொத்து வரி தாக்கல் செய்வதில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் – ஜனவரி 31க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை சரியாக கடைபிடிக்க கண்காணிப்பு குழு ஒன்றையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளிகளில் 10 நாட்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் – சுகாதார இயக்குனர் உத்தரவு!!
இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் நீண்ட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே அவர்கள் மின் கட்டணம் மற்றும் சொத்துவரி செலுத்த அரசு சிறப்பு அரசாணை பிறப்பித்து அந்த அறிவிப்பிற்கு விலக்கு அளிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்