பள்ளிகளில் 10 நாட்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் – சுகாதார இயக்குனர் உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்து மாத்திரைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் சத்து மாத்திரைகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல மாதங்கள் கழித்து பள்ளிக்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர்.
‘தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2021’- ஜனவரி 29 விண்ணப்பிக்க கடைசி நாள்!!
இந்நிலையில் மாணவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் 10 நாட்கள் சத்து மாத்திரைகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை சுகாதார சேவை துணை இயக்குனர்கள் செய்ய வேண்டும். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘மல்டி வைட்டமின்’ மாத்திரைகள் அல்லது ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் ஒரு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 10 நாட்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் செயல்படும் – அரசு அறிவிப்பு!!
மேலும் தனியார் பள்ளிகள் ‘மல்டி விட்டமின்’, ‘வைட்டமின் சி’ மாத்திரைகளுடன் ‘ஜிங்க்’ மாத்திரைகளையும் தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த மாத்திரைகளை மாணவர்கள் கட்டாயம் இரவு உணவிற்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு குறித்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட மாவட்ட பள்ளி நிர்வாகங்கள் கொடுப்பதற்கு தகுந்த அறிவுறுத்தலை சுகாதார சேவை துணை இயக்ககம் பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்