ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் – ஜனவரி 31க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!!
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சொந்தமான சொத்து குறித்த விவரங்களை வருகிற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பணியில் உள்ளவர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையாத சொத்து குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் 10 நாட்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் – சுகாதார இயக்குனர் உத்தரவு!!
இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியில் உள்ளவர்கள், தங்கள் பெரியரிலோ அல்லது அவர்களது குடுப்பதினர் பெயரிலோ, வேறு உறவினர்கள் பெயரிலோ அவர்களுக்கு சொந்தமான அசையாத சொத்து குறித்த விவரங்களை ஆன்லைன் மூலமாக அறிவிக்கலாம் என்ற முறை 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
‘தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2021’- ஜனவரி 29 விண்ணப்பிக்க கடைசி நாள்!!
இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான சொத்து விவரங்கள் குறித்த அறிவிப்பினை இணைய வழியில் உள்ள படிவத்தை நிரப்பி வருகிற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். சரியான காரணமின்றி சொத்துக்கள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்