புதிய துணை மின் நிலையங்கள், டிஜிட்டல் நிதி மையம்: முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். மின் கட்டமைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி, FinTech மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.33,066 கோடியில் மின் கட்டமைப்பு மேம்பாடு
தமிழ்நாடு மின் தொடரமைப்பை மேம்படுத்த ரூ.33,066 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் சுமார் 15,000 கி.மீ. புதிய மின் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் டிஜிட்டல் நிதி மையம்
கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பில் FinTech Hub அமைக்கப்பட உள்ளது. புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், அலுவலக வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் இதில் இடம்பெறும்.
திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்
திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைப்பதற்கான ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சாரம், செமிகண்டக்டர், நிதிநுட்பம் மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், தமிழகத்தின் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.



























