தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு – தாளாளர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்க உள்ள திமுக அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் தாளாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனியார் பள்ளி கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 158 தொகுதிகளில் திமுக பெரும்பான்மையான வெற்றி பெற்றுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் தாளாளர்கள் சங்கம் சார்பில் தற்போது தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்க உள்ள திமுக கட்சியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்துவது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மேலும் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 5 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மே 6 முதல் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!
மேலும் பல தனியார் கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து தனியார் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் இதை முதல் உத்தரவாக செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.