தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் எனவும் ஞாயிற்று கிழமை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த ஆண்டை போல இல்லாமல் மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புதிதாக வருவோருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாளான ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் பொதுவாக மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாக இருக்கும். அதற்கு பதிலாக ஞாயிற்று கிழமைகளில் வேலை நாட்களாக இருக்கும்.
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் – கொரோனா எதிரொலி!!
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஞாயிறு கிழமைகளில் மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்கள் வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை தெரிவித்துள்ளது. அதன் படி இனிமேல் ரேஷன் கடைகள் மாதத்தில் 2 வெள்ளிக்கிழமைகளில் செயல்படும். அதற்கு பதிலாக ஞாயிற்று கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்