தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் – கொரோனா எதிரொலி!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் Spice Jet தனியார் விமான துறை ஊழியர்களுக்கு 50 சதவிகித ஊதியம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான துறை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.68 லட்சமாக உள்ளது. வெளிநாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான துறை பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் அந்த துறையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு அமல்படுத்திய நிதி நெருக்கடியில் இருந்து தற்போது தான் மீண்டு வரும் நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பளத்தில் 10 முதல் 30 சதவிகிதம் குறைப்பதாக அறிவித்தது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் – முழு விபரம் இதோ!!
அதற்கு முன்னரே இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 20 சதவீதம் வரையில் குறைப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவந்த காரணத்தினால் சம்பள பிடித்தம் தொடரப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து 50 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே வாரத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா – உலகளவில் முதலிடம்!!
பைலட்கள், கேபின் பணியாளர்கள் போன்றவர்களுக்கு 10 முதல் 50 சதவீத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டிரைவர் போன்ற ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் முழு சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறையாமல் பரவி வந்தால் ஊழியர்கள் சம்பளத்தில் இதே நிலைமை நீடிக்கும் என அச்சம் நிலவி வருகிறது.