தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி பவர் கட் பிரச்சனை வராது – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் மின்வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
மின்வாரியம்
தமிழகத்தில் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சொன்னால் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் தேவை சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் இருக்கிறது. மேலும் சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. தற்போது மின்வாரியம் துணை மின் நிலையங்களில் இருந்து பீடர் எனப்படும் மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, டிரான்ஸ்பார்மர் உதவியுடன் மின் விநியோகம் செய்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அப்டேட் – நிதி அமைச்சகம் அறிக்கை!
11,000 வோல்டில் வரும் மின்சாரத்தை டிரான்ஸ்பார்மர், 440 வோல்டாக குறைத்து வீடுகளுக்கு அனுப்புகிறது. இந்நிலையில் பல இடங்களில் ஓவர்லோடு காரணமாக டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி கொண்டே இருக்கிறது. இப்போதே இந்த நிலைமை என்றால் 2024 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் மின்தேவை 20000மெகா வாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்னழுத்த பிரச்னை ஏற்படும் இடங்களில் கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக 200 கோடி செலவில் 250கேவிஏ எனப்படும் கிலோ வோல்ட் ஆம்பியர் திறனில் 2500 டிரான்ஸ்பார்மர்கள் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.