மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அப்டேட் – நிதி அமைச்சகம் அறிக்கை!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு போனஸ் ரூ. 7000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்
இந்தியாவில் மத்திய அரசின் கீழ் வரும் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தற்காலிக போனஸ் ரூ. 7000 ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று (அக்.17) செலவினத் துறை வெளியிட்ட அலுவலக குறிப்பாணையின் படி, தற்காலிக போனஸ் செயல்திறனுடன் இணைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் – யார் யாருக்கு எவ்வளவு?
மேலும் இந்த போனஸ் தகுதியுடைய மத்திய அரசு ஊழியர்களில், குரூப் சியில் உள்ளவர்களும், குரூப் பியில் உள்ள அனைத்து அரசிதழ்கள் அல்லாத ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியான உத்தரவின் கீழ் தற்காலிக போனஸ் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் தகுதியான ஊழியர்களுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தற்காலிக போனஸ் வரம்பு ரூ.7000ஆக நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.