தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு பின்னர் ஜனவரி மாத மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மே 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்றுடன் நேரடி தேர்வுகள் மற்றும் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் பொதுமுடக்கம்? உண்மை நிலவரம் இதுதான்!
தற்போது 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் வாக்குச்சாவடி பணிகளுக்காக அவர்களுக்கு விடுமுறை விடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அது குறித்து தற்போது வரையில் அறிவிப்பு வெளியிடப்பவிலை. மேலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமா? அல்லது நேரடி வகுப்புகள் தொடருமா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படவில்லை.
பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
எனவே பள்ளிக்கல்வித்துறை இது குறித்து உரிய அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாளை முதல் (ஏப்ரல் 1) பள்ளிகள் தொடர்ந்து செயல்படுமா? அல்லது விடுமுறையா? என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூரவ அறிவிப்பை விரைந்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.