பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தாக்கம்:
கொரோனா வைரஸின் முதல் அலை நாடு முழுவதும் பரவியதால் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த காரணத்தால் மாநிலத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
CA நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் – ICAI வாரியம் அறிவிப்பு!!
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 10ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறையை மேலும் நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் அறிவிப்பு:
அரசு அறிவித்துள்ள முன்னிரிமை பட்டியலின் படி, அவசர கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி மையங்களை மாநிலத்தில் அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், ஏப்ரல் 10ம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்