தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் பொதுமுடக்கம்? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பொதுமுடக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது. புதிய தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இன்று வெளியான அறிவிப்பின் படி, ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் பொது முடக்கம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவுப்பு – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
ஆனால் தமிழக அரசு ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள், தேர்தலுக்கு பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என நேற்று தெரிவித்திருந்தார். தற்போது பிரச்சாரம், பரப்புரைகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுவதால் கூடுதல் விதிமுறை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
ஆதலால் ஏப்ரல் 6ம் தேதிக்கு (வாக்குப்பதிவு) பின்னர் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் வலம் வருகிறது. ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் தேர்தலுக்கு பின்னர் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என கூறப்பட்டுள்ளது.