தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவுப்பு – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள் தவறாது பங்கேற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கல்வி தொலைக்காட்சி வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் 1 முதல் 11ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகளை திறக்க முடிவு செய்த அரசு அதற்கான கருத்துகேட்பு கூட்டங்களை நடத்தியது.
ஆதார் எண், பான் கார்டு இணைப்பு – இன்றே கடைசி நாள்! 1000 ரூபாய் அபராதம்!!
அதன்படி ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்களின் கல்வி நிலையை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை தொடர உத்தரவிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
9 முதல் 11ம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக பாடங்கள் நடத்தி முடிக்கப்படாத காரணத்தால் கல்வி தொலைக்காட்சி மூலம் மீதமுள்ள பாடங்களை நடத்த கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதன்படி தினசரி 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாட நிகழ்ச்சிகளை கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப, அதனை சார்ந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.