தமிழக அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை – கோரிக்கை மனு!!
தமிழகத்தில் மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர், தங்களுக்கு வேலைவாய்ப்புகளில் சலுகை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலைவாய்ப்புகளில் சலுகை:
தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை சரியாக கிடைப்பதில்லை என கோவை மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், “நன்கு படித்தும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனவும், மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, சம உரிமை சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை அதற்கான எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை.
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை!!
தன்னார்வலர்கள் மட்டுமே எங்களுக்கு சுயதொழில் செய்வதற்கு பாக்கு மட்டை இயந்திரம், மசாலா பொடிகளை அடைக்கும் இயந்திரம் போன்றவற்றை வழங்கியுள்ளனர். அந்த இயந்திரங்களை வைத்து தொழில் செய்வதற்கு எங்களுக்கு இடம் எதுவும் இல்லை, பல நாட்களாக முடக்கி வைத்து அவை பழுதாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழி செய்து தர வேண்டும்”, என அந்த மனுவில் குறிப்பிட்டுருந்தனர்.