தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்!!
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள துணை மருத்துவ படிப்புகளுக்கான பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 துணை படிப்புகளுக்கான அரசு மருத்துவ கல்லூரிகளில் 590 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 858 இடங்களும் உள்ளன.
தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் – அரசாணை வெளியீடு!!
இந்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் பெறப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த படிப்புகளுக்கு மொத்தம் 38,244 பேர் விண்ணப்பித்த நிலையில் 37,344 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!!
அவர்களின் தரவரிசை பட்டியல் www.tnmedicalselection.net என்ற மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்