தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடைபெறாலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இருப்பினும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாத மத்தியில் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் ஜனவரி 19 முதல் திறக்கப்பட்டது.
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!!
இந்நிலையில் மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கியது. அதன்படி பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும், இளங்கலை, முதுகலை உட்பட அனைத்து பிரிவு மாணவர்களுக்கான கல்லூரிகள், பல்கலைக்கழங்கங்கள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
இன்று கல்லூரிகள் திறப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டு முழுவதும் அனைத்து கல்லூரிகளும் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்