தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

0
தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகள் நடத்தியது குறித்து அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உள்ளது. அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழல் நிலவியதால், இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – தமிழக அரசு முடிவு!!

இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு புறம்பானது என ஏஐசிடிஇ தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போது, பல பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டன. அதற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டது.

தமிழக அரசு வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா – கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை!!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆப்லைன் அல்லது ஆன்லைன் முறையில் அரியர் தேர்வுகளை நடத்தி அதற்கான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் கொரோனா பரவல் குறைந்து தமிழகத்தில் தற்போது தான் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால், அரியர் தேர்வு விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு – எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!!

இதனை ஏற்ற நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகள் நடத்தியது தொடர்பான விபரங்களை 4 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!