மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் நியமனம் – தமிழக அரசு முக்கிய தகவல்!!
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு உள்ள 2000 மினி கிளினிக்குகளில் மருத்துவ பணியாளர்கள் நியமனம் குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
மருத்துவ பணியாளர்கள் நியமனம்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தலைவலி, காய்ச்சல் போன்ற சிறிய வியாதிகளுக்கு குணமளிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சார்பில், மாநிலம் முழுவதும் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டது. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என ஒரு மினி கிளினிக்குகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மூலம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படும் முறைக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று காலத்தில் மினி கிளினிக்குகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் ரத்து – மாநில அரசு உத்தரவு!!
எனவே அதில் பணியமர்த்தப்படும் மருத்துவ பணியாளர்களின் நியமனமும் தற்காலிகமானதே எனவும், மத்திய சுகாதாரத்துறை அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு பணியாட்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்