தமிழகத்தில் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற மே 2ம் தேதி (ஞாயிற்று கிழமை) சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் மற்றும் மே 1ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து அரசு இன்று இறுதி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.

நாடு முழுவதும் மினி ஊரடங்கு உத்தரவு? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 2) நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இரு நாட்கள் (மே 1, 2) முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தலாம் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பாக நேற்று பதில் மனுதாக்கல் செய்திருந்த தமிழக அரசு, மே 1ம் தேதி 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் அரசு பொது விடுமுறையாகும். எனவே அன்று முழு ஊரடங்கு தேவையில்லை. மே 2ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கம் போல முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மே 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முழு ஊரடங்கு தொடர்பாக அரசு இறுதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளனர். மேலும் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இன்றைக்குள் அறிவிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர். எனவே இன்று அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!