நாடு முழுவதும் மினி ஊரடங்கு உத்தரவு? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் மினி ஊரடங்கு ஏற்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மினி ஊரடங்கு:
எதிர்பாராத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. பல மாநிலங்களில் நோய்த்தொற்று கை மீறும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது. பலி எண்ணிக்கையும் 3500 வரை உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியமால் பல மாநிலங்கள் திணறி வருகிறது. தினமும் வரும் புதிய நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.
தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – பணியாற்றலாம் வாங்க !
இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நேற்று (ஏப்ரல் 29) பிரதமர் மோடி ராணுவ தளபதி நரவனேயுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
அந்த ஆலோசனையின் போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராணுவம் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டுமாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 29) காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் தோறும் மினி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவ குழுக்கள் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.