விண்ணப்பித்த அனைவருக்கும் உரிமை தொகையா? தேர்தலுக்குப் பின் வரும் மாற்றம் – வெளியான தகவல்!
தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை திட்டம் மீண்டும் விரிவுபடுத்த எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. அதனால் இந்த மாதம் உரிமை தொகை வருமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி உரிமை தொகை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி – பிரக்ஞானந்தா ‘டிரா’ !
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான உரிமை தொகை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் தேர்தலுக்குப் பின் உரிமை தொக திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சிறப்பு திட்ட செயலாளருக்கு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் நடத்தை விதிகள் விளக்கிக் கொள்ளப்பட்ட பின் விரிவாக்க பணிகள் தொடக்கம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பின் விண்ணப்பித்த சுமார் ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.