தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11 வரை நடைபெறும் – வெளியான அறிவிப்பு

0
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11 வரை நடைபெறும் - வெளியான அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11 வரை நடைபெறும் - வெளியான அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.11 வரை நடைபெறும் – வெளியான அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.9) முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அக்.11 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. முதலில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் டைடல் பார்க் அமைக்க திட்டம் – 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! அரசு தீவிரம்!

அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து அனைத்து கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தொடர் அக்.11 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!