தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம் – இன்று முதல் அமல்.. இனி முறைகேட்டிற்க்கு வாய்ப்பில்லை!
தமிழகத்தில் நிலங்களின் புகைப்படம் மற்றும் புவியியல் விவரங்களுடன் பத்திரங்களை பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பத்திரப்பதிவு:
தமிழகத்தில் போலியான ஆவணங்களை கொண்டு பலரும் பத்திரப்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையாக அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் போலி ஆவணப்பதிவை குறைக்க GPS இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC, TNUSRB,TNTET தேர்வர்களுக்கான Best ஆன்லைன் வகுப்பு – வெற்றி உறுதி!
இந்த நிலையில் இன்று முதல் நிலங்களின் புகைப்படம் மற்றும் புவியியல் விவரங்களுடன் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல் பதிவுத்துறை தலைவரால் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.