காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம் – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வருகிற செப் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
உரிமைத்தொகை திட்டம்
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருக்கிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு மையங்கள் மூலமாக அதனை பெறப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த திட்டமானது வருகிற செப்.15 அறிஞ்ர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் செப் 15ம் தேதி துவங்கி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருகிறது.
தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – ரூ. 50,000 நிதிஉதவி .. உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உடைய குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.