தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்த அப்டேட் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உரிமைத்தொகை தகவல்
தமிழக அரசு சார்பில் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் செப் 15 ஆம் தேதி முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஊசாம்பாடி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பம் பெறும் முகாமில் அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விடுதியில் தங்கியிருக்கும் இளைஞர்களுக்கான ஷாக் அறிவிப்பு – வாடகை திடீர் உயர்வு!
அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைத்தால் ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் உரிமைத்தொகை தர இருப்பதாக தெரிவித்தார். இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளில் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் இந்த திட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் பணம் கிடைக்கும், தகுதி இருந்தும் பணம் கிடைக்கவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மேல் முறையீடு செய்யலாம் எனவும், உங்களுடைய விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதி இருந்தால் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.