10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த தமிழக அரசு அனுமதி – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வுகள்:
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்விற்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ள நிலையில், பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 18 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு இல்லை – அண்ணா பல்கலை விளக்கம்!!
இது தொடர்பாக தலைமை செயலர் சண்முகம் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உரிய நடைமுறை விதிகளை பின்பற்றி பொதுத்தேர்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது. பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களிடம் தனித்தனியாக (கூட்டம் சேராதவாறு) விபரங்களை பெற்று தேர்வுக்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.21000 ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் – எல்ஐசி முகவர்கள் மாநாட்டில் தீர்மானம்!!
மேலும் கொரோனா தொற்றின் விளைவாக பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உறுதிமொழி படிவம் பெறப்பட வேண்டும். இது தொடர்பாக பணிகளை மேற்கொள்ளவும் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான நடைமுறைகள் மற்றும் நிர்வாக பணிகளை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Bro nethu than palligal thirakum nu sonniga innaiku exam nu solringa