ரூ.21000 ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் – எல்ஐசி முகவர்கள் மாநாட்டில் தீர்மானம்!!
அகில இந்திய எல்.ஐ.சி சங்கம் சார்பில், தஞ்சாவூரில் 13-வது கிளை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எல்.ஐ.சி முகவர்களுக்கு ரூ.21000 மாத ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
எல்.ஐ.சி முகவர்களுக்கான ஊதியம்:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இந்தியாவின் மிக பெரிய நிறுவனம். 245-க்கு மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வருங்கால சங்கங்களின் கூட்டமைப்பை கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் மும்பை நகரில் அமைந்துள்ளது. 63 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 2000-க்கு மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இதில் பல மக்கள் பயனாளியாக உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 13-வது கிளை மாநாடு கிளை செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எல்.ஐ.சி நிர்வாகிகள் மோகன், உஷாராணி, வசுமதி, பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் எல்.ஐ.சி முகவர்களுக்கு ரூ.21000 மாத ஊதியம் & ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து முகவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்பட உள்ளது. எல்.ஐ.சி காப்பீடு குறித்த பாத்திரங்கள் தமிழில் அச்சடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்த 13-வது மாநாட்டில் மாநில செயலாளர் ராஜா, கோட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், கோட்டத் தலைவர் தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். அதற்கு பிறகு ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கடைசியாக சரவணன் நன்றி தெரிவித்தார். இதில் கண்ணன், இளங்கோவன், சரபோஜி, பிரதீபா என ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்