தமிழகத்தில் தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கடன் உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கடன் உதவி - (1)
தமிழகத்தில் தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கடன் உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கடன் உதவி வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடன் உதவி

தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் அரசு வழங்கும் கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டால், தாட்கோவில் சென்று எந்த மாதிரியான தொழில் தொடங்க கடன் தருகிறார்கள். அதற்கான டேட்டாக்களை தயார் செய்வது, புள்ளி விவரங்களை தயார் செய்வது, மேலும் அந்த கடன் பெற என்ன தகுதி வேண்டும் என விவரங்களை கேட்க வேண்டும்.

பின் தகுதி இருந்தால் விண்ணப்பித்து கடன் வாங்கி முன்னேறலாம். மேலும் அரசு வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் ரூ.40 கோடி செலவில் புதிய திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் காலியிடங்கள் – கடும் அதிருப்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!