தமிழகம் முழுவதும் ஜன.28 பொது விடுமுறை – முதல்வர் உத்தரவு!!
தமிழகம் முழுவதும் ஜனவரி 28ம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாப்பட உள்ள நிலையில், பொது விடுமுறை தினமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பொது விடுமுறை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த ஜனவரி 5ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழகத்தை போன்றே பல நாடுகளிலும் தமிழ் கடவுளாகிய முருகனின் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை தமிழகத்திலும் அமலப்டுத்தக்கோரி பல மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் 38% தகவல் தொழில்நுட்பத்துறை பெண் ஊழியர்கள் – வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்!!
இதனை ஏற்று, ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும் இனிவரும் ஆண்டுகளிலும் ஜனவரி 28 பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றது. நாளை தைப்பூசத் திருவிழா கொண்டப்பட உள்ளது. இதற்காக கோவில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Yenga office le leave kudaka matranga 😀😔