தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!

0
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இலவச உணவு:

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறையில் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோய்யாளிகளுக்கான அளிக்கப்படும் உணவு, சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை தொடங் கிவைத்த அமைச்சர் சேகர்பாபு பின்னர் பேசுகையில்,ஊரடங்கு நாட்களில் தனியார் அமைப்பு சார்பில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!