11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப் – 5.32 லட்சம் கொள்முதல்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழக பள்ளி மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
இலவச லேப்டாப் திட்டம்:
பள்ளி மாணவர்களின் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு மாணவர்களுக்கான லேப்டாப் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பிப்ரவரி 26 முதல் செமஸ்டர் செய்முறை தேர்வுகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
2020-2021 கல்வியாண்டில் 5.16 லட்சம் பதினோராம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11,553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும், 463 மாற்றுத்திறனாளி ப்ளஸ் 1 மாணவர்களும், மேலும் கடந்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த 1293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என மொத்தம் 5.32 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு வழங்கும் லேப்டாப்களை எல்காட் நிறுவனம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ளது. விரைவில் தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என எல்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்