பிப்ரவரி 26 முதல் செமஸ்டர் செய்முறை தேர்வுகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள் தொடக்கம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!
இதன்படி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “அண்ணா பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முழு நேரம் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இவர்களுக்கான செமஸ்டர் கோட்பாடு தேர்வுகள் (Theory Exam) வருகிற மார்ச் மாதம் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது.
பள்ளிகள் திறப்பு எதிரொலி – 52 ஆசிரியர்கள் & 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!
இதேபோல பகுதிநேரம் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதல் செமஸ்டருக்கான பாட வகுப்புகள் மார்ச் 3 ஆம் தேதி முடிவடைந்து அவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கப்படும். மேலும் மார்ச் 15-ஆம் தேதி முதல் கோட்பாடு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகள் முடிந்த பின் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இன்ஜினியரிங் மாணவர்கள் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் ஆகிய இருவருக்கும் இரண்டாம் செமஸ்டர் வகுப்புகள் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்படும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்