கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மருத்துமனை ஆய்வக கட்டணத்தை ரூ.3000 தற்போது ரூ.1500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து போக்குவரத்து, விமான பயணங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!
தற்போது கொரோனா பரிசோதனைக்கான தனியார் மற்றும் ஆய்வகங்களில் ரூபாய் 3000 ஆக இருந்த கட்டணம் ரூ.1500-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சில தனியார் மையங்களில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் சாமானிய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்