பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!

0
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில் அதனை அறிந்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பது எப்போது?

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடாத நிலையில் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பொங்கல் பண்டிகைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலை பள்ளிகளில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டத்திற்கான பணிகள் நடைபெறுகிறது. அதனை பார்வையிட சென்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அடுத்த வாரம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10&12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்படும். அதில் பெற்றோர்கள் அதிகமானோர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்”, எனத் தெரிவித்தார்.

ஜனவரி 6 (நாளை) முதல் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

மேலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுக்கான கருத்து கேட்கும் கூட்டம் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் அதிகமாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!