தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6 காஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின் இலவசம் – முதல்வர் வாக்குறுதி!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பிரச்சாரத்தின் போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக 6 காஸ் சிலிண்டர்கள் மற்றும் சோலார் அடுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் அறிக்கை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், அறிக்கை, வேட்பாளர் மனு தாக்கல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல முன்னணி அரசியல் கட்சிகளும் மக்களுக்கான பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை கொண்டு செல்லும் நோக்கில் வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளில் நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் திரும்ப பெற மார்ச் மாதம் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் சுயேச்சை கட்சிகளுக்கான சின்னங்களும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 7,250க்கு அதிகமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 4024 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறும் வழிமுறைகள் – மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!!
அதில் 2750 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில், “அதிமுக.,வில் மக்களுக்கான பல நல்ல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக 6 கேஸ் சிலிண்டர்கள், சோலார் அடுப்பு, வாஷிங்மெஷின் வழங்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.