தமிழக சட்டமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலேயே பணி வழங்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என கடந்த 17 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் பட்டியல் தயார் செய்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரிகளுக்கான கோரிக்கை மனுவை மாவட்ட தலைவர் கலியபெருமாள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாவட்டங்களுக்குள் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் பணியாற்ற ஆணை வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர்களின் பாதுகாப்பு காரணமாக அவர்களின் சொந்த சட்டமன்ற தொகுதியிலேயே பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வி அதிகாரிகள் உத்தரவு!!

தேர்தல் நாள் அன்று இரவு நேரம் அவர்களின் வீடுகளுக்கு செல்ல பேருந்து வசதி செய்து தர வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!