அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் விடுப்பு எடுக்கக் கூடாது – மாவட்ட கல்வி அலுவலர்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளன. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்கான பட்டியல் தேர்தல் ஆணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்தல் பயிற்சி அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாட்களில் தேர்தல் நடைமுறை வந்து விட்டமையால் விடுப்பு எடுக்கக்கூடாது என தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட வேண்டும் என வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்