தமிழக அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குசாவடி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தபால் வாக்களிப்பு மூலமாக வாக்களிப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனர் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
TN Job “FB Group” Join Now
அவர் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்டுள்ளவை, “தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் முறை மூலம் வாக்களிப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. அவர்களுக்கு அவ்வாறு வாக்களிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை, எனவே அவர்களுக்கு தேர்தல் நடைபெறும் 3 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதியில் தனி வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
இந்த வழக்கு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் மார்ச் 8 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்