தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு – காரணம் இது தான்!

0
தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு - காரணம் இது தான்!

தமிழகத்தில் திடீரென முட்டை விலையானது 5 பைசா உயர்ந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை விலை

தமிழக மக்கள் மத்தியில் விருப்பமான உணவுகளில் ஒன்றாக முட்டை இருக்கிறது. இந்நிலையில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு முட்டையின் விலை ரூ. 5.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்கு சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC Gr.II 2024 CV-PMT-ET தேதி மாற்றம் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!