தமிழகத்தில் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் மே 1 தேதி 18 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி அளிப்பது சற்று சந்தேகமே என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தாமதம்:
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களை தொற்றிலிருந்து பாதுக்காக்க விதிமுறைகளை விதித்து கடைபிடிக்க அரசு வலியுறுத்துகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் வைட்டமின் மாத்திரைகளையும் அரசு மாவட்டங்களின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கி வருகிறது.
ஏற்கனவே தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்தியாவிலேயே முதலாவதாக இதை அறிவித்த மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழக அரசு 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மருத்துவ பணிகள் கழகத்திற்கு ஆணையிட்டது. இதன் வாயிலாக நேற்று சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தது. இதை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் பணியும் நடைபெற்றது.
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை!!
வருகின்ற மே 1 ம் தேதி அனைவர்க்கும் தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. ஏற்கனவே வயதானவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 45 மேற்பட்டோர்க்கு அளிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் போதுமானதாக இருப்பதாகவும், தற்போது 18 வயது மேற்பட்டோர்க்கு அளிக்கும் வகையில் மருந்துகள் இருப்பு இல்லை இதனால் நாளை முதல் அவர்களும் அளிப்பது சற்று சந்தேகமே என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்ததுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்