தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்னர் – வியாபாரிகள் தகவல்!!
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட கூடாது போன்ற முழு ஊரடங்கு அறிவிப்புகளுக்கு முன்னர் வியாபாரிகளிடம் அரசு கலந்தாலோசித்து தான் முடிவு செய்ய வேண்டும் என வாணிக சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நேரங்களில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஞாயிற்று கிழமைகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் போன்ற சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
இதனால் வணிக வியாபாரிகள் சங்க கூட்டத்தில் அந்த சங்கத்தின் தலைவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக கடைகள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் போன்றவற்றை மூட முன்னறிப்பு ஏதும் இல்லாமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வியாபாரம் பல பாதிக்கப்பட்டுள்ளது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் – இன்று முதல் தொடக்கம்!!
ஏற்கனவே கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் தற்போது இதன் மூலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இந்த உத்தரவை அறிவிப்பதற்கு முன் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.