தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் மீண்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் தொற்று இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அறிவித்தால் மக்கள் நிலை மிகவும் மோசமாகி விடும். எனவே அரசு தெரிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் சரியான முறையில் கடைபிடித்தாலே ஊரடங்கை தவிர்க்கலாம்.

ஊரடங்கை தவிர்க்கும் வழிகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல முன்னணி நாடுகள் முழு ஊரடங்கை ஆயுதமாக பயன்படுத்தினர். அதே போல இந்தியாவிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் தாக்கமாக மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்றாடம் பணி செய்து பணம் ஈட்டும் தினக்கூலிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

TN Job “FB  Group” Join Now

ஒரு பக்கம் நோய் தாக்கம், ஒரு பக்கம் பொருளாதார தாக்கம் என மக்கள் ஒரு நாளை கடத்துவதற்கு பெரும் சிரமமடைந்தனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மக்களும் ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,000மாக பதிவாகியுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு அமல்படுத்திய தாக்கமே அதிகமாக உள்ளதால், தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் மக்களின் நிலைமையை எண்ணி கூட பார்க்க முடியவில்லை.

தமிழக அரசு பேருந்துகள் இயக்கத்தில் புதிய மாற்றங்கள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

அரசு தெரிவித்த கட்டுப்பாடுகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு வரும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசியை அனைத்து தரப்பு மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அரசு தெரிவித்த அனைத்து வழிமுறைகளையும் சரியான முறையில் கடைபிடித்தால் முழு ஊரடங்கில் இருந்து தப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!