தமிழகத்தில் இன்று 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 9 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவினால் நோய்த்தொற்று கட்டுக்குள் இருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இது கொரோனா இரண்டாவது அலைக்கு அடித்தளமிடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,64,450 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 12,582 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 610 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,45,178 ஆக உள்ளது.
சென்னையில் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – கொரோனா தொற்று எதிரொலி!!
இன்று அதிகபட்சமாக சென்னையில் 421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,86,30,686 கொரோனா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.