சென்னையில் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – கொரோனா தொற்று எதிரொலி!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் தாம்பரம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பள்ளிக்கு மார்ச் 22ம் தேதி வரை (3 நாட்கள்) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது வரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதியான 5 பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னை பள்ளிகளிலும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மார்ச் 31 வரை 50% பணியாளர்களுடன் மட்டுமே நிறுவனங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!!
தாம்பரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் ஒருவருக்கு அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 2 ஆசிரியர்களுக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருக்க பள்ளி மூடப்பட்டது. மார்ச் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அப்பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்பள்ளியில் பயிலும் 80 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.