மார்ச் 31 வரை 50% பணியாளர்களுடன் மட்டுமே நிறுவனங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே மார்ச் 31ம் தேதி வரை இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நோய் பரவல் குறைந்த காரணத்தால் பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. தற்போது கொரோனாவின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்கள் மார்ச் 31 வரை 50 சதவீத பார்வையாளர்கள் / பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உடல்நலம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
பணி நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்காத எந்தவொரு நிறுவனமும் அரசாங்கத்தின் மறுஉத்தரவு வரும் வரை மூடப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று இரவு வரை 24 மணி நேர காலகட்டத்தில் 25,833 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவலுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.