பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் மாதம் 21 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புகள்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல முன்னணி அரசியல் கட்சியினரும் மக்களுக்கு செய்யப்பட உள்ள பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வீதியில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டங்களாக நடத்தப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் 14 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பரிசீலனை செய்து சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளனர்.