அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு தேர்வுகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அரசின் உத்தரவிற்கு முரண்பாடாக சில தனியார் கல்லூரிகள் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி தேர்வுகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதில் உள்ள உண்மை தன்மையை கண்டறிந்து சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை:
கொரோனா நோய் அச்சம் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் பேர் வந்தால் நோய் பரவக்கூடும் என்ற நோக்கத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியது. இறுதியாண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தவும், மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தவும் யுஜிசி உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில தனியார் கல்லூரிகள்ள் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் நேரடியாக பாடங்கள் நடத்துவதாக புகார் வந்துள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த புகார் குறித்து உண்மை தன்மையை அறிந்து சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்