பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

1
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் நிலையில் நேற்று நடந்து முடிந்த கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கலாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கடந்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தனர். ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் முதற்கட்டமாக நவம்பர் மாதம் 9-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்முடிவில் அதிகப்படியான பெற்றோர் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கபட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கமும் குறைந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழக மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது??

இதற்கான பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் 2 நாட்களாக நடைபெறும் நிலையில் நாளையுடன் முடிவடைகிறது. நேற்று கும்மிடிப்பூண்டி அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலையில் பெற்றோர்கள் பங்கேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகள் திறக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதேபோல திருத்தணி அரசினர் மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மத்திய பணி தேர்வுக்கான (SSC) இலவச பயிற்சி – மாநில வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு!!

இவ்வாறாக இருக்க ஒருசில ஊர்களில் கருத்து கேட்பு கூட்டத்தில் 300 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 27 மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிலும் 18 பெற்றோர்கள் மட்டுமே பள்ளிகள் திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட இதில் மாணவர்களின் பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது பெரும் வேதனை அளிக்கின்றது என்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறான சூழ்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!