மத்திய பணி தேர்வுக்கான (SSC) இலவச பயிற்சி – மாநில வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு!!
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பணியிடங்களுக்கான உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், உதவி அலுவலர், வருமானவரி அலுவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 32 விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!
இந்த தேர்வுகளில் 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை. இதற்கான தேர்வுகள் வருகிற மே மாதம் 29-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க வருகிற ஜனவரி 30-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – தேர்வர்கள் வருத்தம்!!
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநர் ஆ.ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வகுப்புகள், மாதிரி தேர்வுகள், பாட புத்தகங்கள் என அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்